November 2010


நட்சத்திரங்கள் 27:

1. அசுவினி, 
2. பரணி, 
3. கார்த்திகை, 
4. ரோகினி, 
5. மிருகசீரிடம், 
6. திருவாதிரை, 
7. புனர்பூசம், 
8. பூசம், 
9. ஆயில்யம், 
10. மகம், 
11. பூரம், 
12. உத்திரம், 
13. அஸ்தம், 
14. சித்திரை, 
15. சுவாதி, 
16. விசாகம், 
17. அனுஷம், 
18. கேட்டை, 
19. மூலம், 
20. பூராடம், 
21. உத்திராடம், 
22. திருவோணம், 
23. அவிட்டம், 
24. சதயம், 
25. பூரட்டாதி, 
26. உத்திரட்டாதி, 
27. ரேவதி.


ஜாதகத்தில் லக்கினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். லக்கினம் என்பது ஜாதகத்தில் முதல் வீடாகும். இது ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. பன்னிரு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்களை இங்கு காணலாம்.

மேஷ லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர் செம்பு நிறமுடையவர். கோழை அதாவது கபம் பிருகிருதி உள்ளவர். முன்கோபம் வரும். மந்த புத்தி, ஸ்திரமான தன்மை, பெண் போக பிரியர், குணசாலி, தன் முயற்சியால் புகழ் அடைபவர், பேசுவதைவிட எழுதுவதில் சமர்த்தர், மதிம சரீரம் உடையவர். இரு தாரங்கள் அமைய வாய்ப்பு உண்டு. ஆயுதம், துப்பாக்கி சூடு,கல், மரத்திலிருந்து விழுதல், சுவரிடிந்து விழுதல், வெட்டு, குத்து இவற்றால் காயம் ஏற்படும். அற்ப சந்ததி உள்ளவர். அரசு தொடர்புடைய உத்தியோகம் அமையும், 5 வயதில் நெருப்பாலும், 7 வயதில் தண்ணீராலும், 10வது வயதில் காய்ச்சலாலும், 20 வது வயதில் காது வாயில் நோயாலும், 22 வது வயதில் பாம்பாலும், 25 வது தண்ணீரில் கண்டமும், 28 வயதில் உடலில் ஏற்படும் காட்டியல் கண்டமும் ஏற்படும். பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

ரிஷப லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர், உண்மையே பேசுபவர், கணிதத்தில் புலமையுடையவர், புதுபுது ஆடைகளை உடுப்பதிலும் விருப்பமுள்ள ஆடம்பர பிரியர். குழந்தைதனம் மிக்கவர். ஞாபக சக்தி உடையவர், பிறர் பொருளை வாங்கி செலவு செய்வதில் ஆர்வமுடையவர், சிறு குழந்தைகளின் மேல் பிரியமுடையவர். இவர் பிறந்தவுடன் ஆயுதம் போன்ற கருவியால் தாக்கப்பட்டு ரண காயம் ஏற்பட வாய்ப்புண்டு. சுப காரியங்களில் பிரியமுள்ளவர், குழந்தைகள் பெரும்பாலும் பிற்காலத்தில் தான் பிறக்கும். இவர் சங்கீத, நடன கலைகளில் வல்லவர், இலக்கிய ரசனையும் ஸ்திர புத்தியும் உள்ளவர், இனிப்பு சுவையில் பிரியம் உள்ளவர், சிற்றின்ப பிரியர், செடி கொடி பூஞ்சோலைகள் வைப்பதில் ஆர்வமுள்ளவர், நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உண்டு. பல் நோய், டான்சில் நோய் ஏற்படலாம், களத்திர தோஷமுண்டு. 5 வது வயதில் நெருப்பினாலும், 16 வது வயதில் கண்ட மாலையினாலும், 19 வது வயதில் இருமலினாலும், 20, 27 வது வயதில் காய்ச்சலினாலும் ஆபத்து ஏற்படும். இவர் ஆணி மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் உத்திரட நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை சுரத்தால் மரணமடையலாம்.

மிதுன லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள்ஆசை நிறைய உடையவர்கள். ஆசார சீலர். இனிமையாக பேசுபவர்கள், காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள், பித்த நோயும், சிவந்த நிறமும் உடையவர்கள், சந்தர்ப்பவாதி, இரட்டை குணமுள்ளவர், இடுப்புக்கு மேல் பாகம் உயரம், கைகள் நீளம், வயிறு பெரிதாக இருக்கலாம். பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார். சளி, டி.பி, இன்புளுயன்சா மற்றும் சுவாச நோய்கள் ஏற்படலாம். இரு தாரம் ஏற்படலாம். 3 ஆம் வயதில் கண்டமும், 5 ஆம் வயதில் நெருப்பாலும், 8 வது வயதில் ஆயுதத்தாலும், 10 வது வயதில் பகைவர்களாலும் ஆபத்துகள் ஏற்படும். 18 வது வயதில் வாயு கோளாறினாலும், 28 வது வயதில் கண் நோயும் ஏற்படும். ஆணி மாத சதுர்த்தசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை இரவு இருதய நோயால் மரணமடையலாம்.

கடக லக்கினம்

கடக்க லக்கினத்தில் பிறந்தவர்கள் வாக்கு வன்மையுடன் சாமர்த்தியமாக பேச வல்லவர்கள். பென்னசையுடயவர்களாதலால் விலை மாதர் நட்பு உடையவர்கள். சிவந்த நிறமும் கொண்டவர்கள், செல்வந்தர்-நவதானிய வியாபாரம் லாபம் தரும் தொழிலாகும். குருவே தெய்வமென போற்றுவார். மறைவிடங்களில் மஞ்சமுடையவர். நீர், கடல் சம்பந்தமான தொழில் செய்வர். ஹோட்டல், உணவு சம்பந்தமான தொழிலும் செய்வர். 5,16,20,25,40 வயதில் கண்டம் உண்டாகலாம். இவர்கள் மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் மிருகசீரிச நட்சத்திரத்தில் புதன்கிழமை மரணமடைவார்கள்.

சிம்ம லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் உணவில் தீராத ஆசையுடயவர்கள், அர்ச்சகராக வேதம் ஓதுபவர்களாக தொழில் புரிவார்கள், தர்மகுணம் கொண்டவர்கள், சுய தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள், கடுகடுப்பும் சினமும் வெளிப்படும் தோற்றம், அரச யோகத்தை குறிக்கும் சாமுத்ரிகா லக்ஷணங்களை உடையவர். தன் கெளரவம் கெடாமல் பார்த்து கொள்வார், சுதந்திர உணர்வுகள் அதிகம், சங்கீதம், நாடகம், இசை இவற்றில் பற்றுண்டு. சங்கீத நாடக, சினிமாத்துறை, அரசு துறை உத்தியோகம் அமையலாம். 5,10,27,30 வயதுகளில் காய்ச்சல் ஏற்பட்டு குணமாகலாம். இவர் பங்குனி மாதம் தேய்பிறை பிரதமை (அல்லது பெளர்ணமி) திதியில் அஸ்த நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை பகலில் மரணமடையலாம்.

கன்னி லக்னம்

ஆசார சீலர், தர்ம குணமுடையவர், இறக்க மனப்பாங்குடையவர், பல தொழில் செய்பவர், செல்வ நிலையில் ஏற்ற இரக்கமுடையவர். இளமையில் கஷ்டபடுபவர். பிற்காலத்தில் செல்வம் சேரும். பெற்றோரை பாதுகாப்பவர், பிறரால் தொழில் வாய்ப்பும் அதில் முன்னேற்றமும் உண்டு. வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் கலந்த நோய் ஏற்படக்கூடும். காலில் மறு இருக்கும். கலை, இலக்கியம், எழுத்து, இசை இவற்றில் வல்லவர், வழக்காடி வெற்றி பெறுவதில் நிபுணர், விஞ்ஞானம், கணிதம், ஜோதிடம் இவற்றில் வல்லவர். மருத்துவம், சமய சொற்பொழிவு இவற்றில் ஈடுபாடு உண்டு. சமய ஈடுபாடும், தளவழிபாட்டு ஈடுபாடும் உண்டு. பெட்டிக்கடைகள், குமாஸ்தா தொழில்கள், ஆடிட்டர் போன்ற தொழில்கள் செய்பவர். புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர், ஆவண பதிவாளர், காரியதரிசி, பங்கு சந்தை நிபுணர்.

விஷ காய்ச்சல், வாயிற்று கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் எளிதில் பற்றிகொள்ளும். 5 வயதில் நெருப்பாலும், 10 வது வயதில் காய்ச்சலாலும், 18 வது வயதில் அம்மை நோயாலும் கண்டம் ஏற்படும். வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

துலாம் லக்னம்

இனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அரசு துறை வேலை வாய்ப்பு பெறுவார். அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள். இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. எல்லாருக்கும் இனியவர், வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டு. சிலேத்தும, அதாவது சளி நோய் உள்ளவர். பெண்களை கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிக தேர்ச்சி பெறுவார். கற்பனை திறன் அதிகம். இடுப்பு பகுதியில் நோய், நீரிழிவு நோய் இவற்றால் பாதிக்கப்படலாம். 7 வது வயதில் வியாதியாலும், 12 வது வயதில் நெருப்பாலும், 19 வது வயதில் அம்ம்மை நோயாலும், 28 வது வயதில் பகைவர்களாலும், 48 வது வயதில் தண்ணீராலும் கண்டம் ஏற்படும். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.

விருச்சிக லக்கினம்

பெற்றோரிடம் பாசம் மிக்கவர். மனைவியிடம் அன்பு காதலுடையவர். இனிமையாக பேசும் ஆற்றலுடையவர். எடுத்த காரியத்தை திறமையுடன் முடிப்பவர். வலிமையான கால்கள், திரண்டுருண்ட தோள்கள், வேகமான நடை இவற்றையுடயவர். கேட்போர்க்கு மறுக்காது கொடுப்பவர். நன்றாக பேச வல்லவர். இவர் பேச்சுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும். தம் உறவினர்களிடம் துவேஷம் உள்ளவர். காம இச்சை அதிகம் உள்ளவர். மனைவியிடத்தில் அதிக ஆசை உள்ளவர். சாஸ்திரப்படி நடப்பவர். சத்ருகளை ஜெயிப்பவர். வலிமையான உடலும், முரட்டுத்தனத்தை எடுத்துக்காட்டும் தோற்றம் உள்ளவர். எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர். வட்டி தொழில், பைனான்ஸ் செய்வதில் வல்லவர். இரசாயன துறை, சுரங்க வேலை, சித்த வைத்தியம், பந்தய, சூட்ட, காபரே நடன தொழில் நடத்தலாம். விவசாய தொழில், துறைமுக தொழில், விளையாட்டு, மின்வாரியம் போன்ற தொழில்களும் அமையலாம். 5 வது வயதில் காய்ச்சலாலும், 10, 12, 18 வது வயதில் நெருப்பாலும், 40 வது வயதில் வாதம், காய்ச்சலாலும் கண்டம் ஏற்படும். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார்.

தனுசு லக்னம்

இவர்கள் மூத்தவர்களுக்கு பயப்படாதவரும் இளையவர்களுக்கு அஞ்சுபவர்களும் ஆவர். கல்வியாளர். பகைவர்களை வெல்பவர். இளம் வயதில் செல்வமுடையவர். எந்த காரியத்திலும் லாப நஷ்டம் பார்ப்பவர். திருமாலின் பொலிவுள்ளவர். வாசனை பொருட்களில் விருப்பம் உள்ளவர். படிப்பாளி. தம் தாய் தந்தையை காப்பவர். வாகன பாக்கியம் உண்டு. நல்ல கட்டான உடல் வாகும் முக்கோண முகமும், சிவந்த நிறமும் உள்ளவர். உதட்டில் குழிவிழுந்த அதிர்ஷ்ட அடையாளம் உண்டு. நிறைய ரோமம் உண்டு. தத்துவம், ஞானம் வேதாந்தம் முதலியவற்றில் விருப்பம் உண்டு. அரசாங்க உத்தியோகத்திற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கரிஞர் , ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோஹிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வி துறை, பதிப்பு துறை, போன்ற தொழில்கள் அமையலாம். 3, 10, 32, 40 வது வயதில் கண் நோயால் பாதிக்கப்படலாம். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிகிழமை மாலை இயற்கை எய்தலாம்.

மகர லக்னம்

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் அழகை ஆராதிப்பவர்கள். மலர்களின் மேல் விருப்பமுள்ளவர்கள். சிவந்த நிறமுடையவர். மனைவி / கணவன் மேல் பிரியமுடையவர்கள். மறைவிடத்தில் மச்சமுள்ளவர். திரிலோக சஞ்சாரியாக ஊர் சுற்றுபவர். பலதுறை கல்வியும் காரியம் சாதிக்கும் வலிமையும் பெற்றவர்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறனும் உள்ளவர். சுய நலம் மிக்க காரியவாதி. மனைவியிடம் அதிக அன்புள்ளவர். படிப்பில் மந்தமானவர். கஞ்சர், எளிதில் பிறரை நம்பாதவர். சந்ததி விருதியுண்டு. இளைத்த ஒல்லியான தேகம் உள்ளவர். தொங்கும் கன்னம், தொய்ந்த தோள்கள், வயதுக்கு அதிகமான தோற்றமும் உள்ளவர். பலன் கருதியே பிறருக்கு உதவுபவர், அரசு தரப்பு வேலைகள் உண்டு, மிகவும் சந்தேக புத்தி உள்ளவர். ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்துகொண்டு இருக்கும். சனி ஜாதகத்தில் நன்கு அமைந்தால் தெளிவு, தியாக புத்தி இருக்கும். தீர்கதரிசியாகவும் இருப்பார். அரசாங்க வேலை, தொழிற்சாலை, எண்ணெய் வள வாரியம், விவசாயம் முதலிய தொழில் உண்டு. மூட்டு வலி, ருமாட்டிசம், கால் சம்பந்தமான நோய்கள் உண்டு. 3,4,5,7,8,10,32,37 வது வயதுகளில் தண்ணீர், சுரம், விஷம் இவற்றால் தொல்லைகள் ஏற்படலாம். ஆவணி மாத தேய்பிறை ஞாயிறு உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் உதய காலத்தில் மரணம் ஏற்படலாம்.

கும்ப லக்னம்

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள். பெண் நண்பர்கள் அதிகம் உண்டு. பித்த சம்பந்தமான நோயுடையவர்கள். நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர். புத்திர மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துகொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கறுப்பு நிறமுடைய உயர்ந்த உடல் வாகு, முட்டை போன்ற நீள்வட்ட முகம், ஒட்டிய கன்னம், அழகிய தோள்கள், பெருத்த வயிறு இவை எல்லாம் கலந்த தோற்றமுடையவர். நோய் அதிகம் ஏற்படாது. கலை இலக்கியம், நாட்டியி பயிற்சி, சிற்ப கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்கு சேவை செய்யும் மனபான்மையும் உண்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்து தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞான துறைகளிலும் ஈடுபாடு உண்டு. தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார். இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம். சீதள பாதிப்பு, இதய நோய், வாத நோய், வெண் குஷ்டம் போன்ற தோள் நோய்கள், வாதம், வலிப்பு, மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படலாம். சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழகிழமை மாலை மரணம் ஏற்படலாம்.

மீன லக்னம்

செயல்வீரர், திறமைசாலி, ஆன்மீக உணர்வுமிக்கவர், உண்மையை விரும்பவர், இறக்க மனமுடையவர், ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வமுடையவர். பிறரது பொருட்கள் பால் விருப்பமுடையவர், மலர்கள் பால் ஆசையுடையவர், இரண்டு திருமணம் நடைபெறும் (இல்லையெனில் பிற பெண்கள் தொடர்பிருக்கும்). பயிர் தொழிலில் செல்வமும், நிறைய வயல்களும் உடையவர். ஞானி, பெரியோர், அந்தணர் இவர்கள் பால் பக்தி விசுவாசம் உள்ளவர். அழகர், வீரர், வாசனை பொருட்களில் பிரியர், அதிக செலவாளி, கண்,காத்து நோய்கள் ஏற்படும். அளவக் உண்பவர், ஆடை அணி அலங்கார பிரியர். அஹிம்சையில் பற்று உண்டு. சிக்கல்கள் வரும்போது சமாளிக்க தைரியமற்றவர், சாத்வீக குணம் உண்டு. லக்னம் அசுப சம்பந்தம் பெற்றால் சிற்றின்பத்தில் இச்சை அதிகமுண்டு. காவியம், நாடகம், சங்கீதம், நடனம் இவற்றில் ஈடுபாடு உண்டு. அமானுஷ்யமான விஷயங்களை ஆரய்வ் ஆராய்வதில் சமர்த்தர். மானசீக தொழிலே இவர்க்கு பெரும்பாலும் அமையும். யோகம், தியானம் போன்றவற்றில் சாதனையாளர். நீர்நிலை, கடல் சம்பந்தமான தொழில்கள் அமையும். ஏழையாயினும் முயன்று வசதிகளை பெறுவார். நண்பர்கள் மத்தியில் மறைமுகமான எதிரிகள் உண்டு. சிலேத்தும நோய்கள் ஏற்படலாம். 12, 20 வது வயதில் காய்ச்சலாலும், 28 வது வயதில் இருமல் போன்ற வியாதிகளாலும் தொல்லை ஏற்படும். சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.


பன்னிரண்டு ராசிகள்:

ஜாதகத்தில் லக்கினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். லக்கினம் என்பது ஜாதகத்தில் முதல் வீடாகும். இது ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. பன்னிரு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்களை இங்கு காணலாம்.

மேஷ லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர் செம்பு நிறமுடையவர். கோழை அதாவது கபம் பிருகிருதி உள்ளவர். முன்கோபம் வரும். மந்த புத்தி, ஸ்திரமான தன்மை, பெண் போக பிரியர், குணசாலி, தன் முயற்சியால் புகழ் அடைபவர், பேசுவதைவிட எழுதுவதில் சமர்த்தர், மதிம சரீரம் உடையவர். இரு தாரங்கள் அமைய வாய்ப்பு உண்டு. ஆயுதம், துப்பாக்கி சூடு,கல், மரத்திலிருந்து விழுதல், சுவரிடிந்து விழுதல், வெட்டு, குத்து இவற்றால் காயம் ஏற்படும். அற்ப சந்ததி உள்ளவர். அரசு தொடர்புடைய உத்தியோகம் அமையும், 5 வயதில் நெருப்பாலும், 7 வயதில் தண்ணீராலும், 10வது வயதில் காய்ச்சலாலும், 20 வது வயதில் காது வாயில் நோயாலும், 22 வது வயதில் பாம்பாலும், 25 வது தண்ணீரில் கண்டமும், 28 வயதில் உடலில் ஏற்படும் காட்டியல் கண்டமும் ஏற்படும். பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

ரிஷப லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர், உண்மையே பேசுபவர், கணிதத்தில் புலமையுடையவர், புதுபுது ஆடைகளை உடுப்பதிலும் விருப்பமுள்ள ஆடம்பர பிரியர். குழந்தைதனம் மிக்கவர். ஞாபக சக்தி உடையவர், பிறர் பொருளை வாங்கி செலவு செய்வதில் ஆர்வமுடையவர், சிறு குழந்தைகளின் மேல் பிரியமுடையவர். இவர் பிறந்தவுடன் ஆயுதம் போன்ற கருவியால் தாக்கப்பட்டு ரண காயம் ஏற்பட வாய்ப்புண்டு. சுப காரியங்களில் பிரியமுள்ளவர், குழந்தைகள் பெரும்பாலும் பிற்காலத்தில் தான் பிறக்கும். இவர் சங்கீத, நடன கலைகளில் வல்லவர், இலக்கிய ரசனையும் ஸ்திர புத்தியும் உள்ளவர், இனிப்பு சுவையில் பிரியம் உள்ளவர், சிற்றின்ப பிரியர், செடி கொடி பூஞ்சோலைகள் வைப்பதில் ஆர்வமுள்ளவர், நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உண்டு. பல் நோய், டான்சில் நோய் ஏற்படலாம், களத்திர தோஷமுண்டு. 5 வது வயதில் நெருப்பினாலும், 16 வது வயதில் கண்ட மாலையினாலும், 19 வது வயதில் இருமலினாலும், 20, 27 வது வயதில் காய்ச்சலினாலும் ஆபத்து ஏற்படும். இவர் ஆணி மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் உத்திரட நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை சுரத்தால் மரணமடையலாம்.

மிதுன லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள்ஆசை நிறைய உடையவர்கள். ஆசார சீலர். இனிமையாக பேசுபவர்கள், காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள், பித்த நோயும், சிவந்த நிறமும் உடையவர்கள், சந்தர்ப்பவாதி, இரட்டை குணமுள்ளவர், இடுப்புக்கு மேல் பாகம் உயரம், கைகள் நீளம், வயிறு பெரிதாக இருக்கலாம். பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார். சளி, டி.பி, இன்புளுயன்சா மற்றும் சுவாச நோய்கள் ஏற்படலாம். இரு தாரம் ஏற்படலாம். 3 ஆம் வயதில் கண்டமும், 5 ஆம் வயதில் நெருப்பாலும், 8 வது வயதில் ஆயுதத்தாலும், 10 வது வயதில் பகைவர்களாலும் ஆபத்துகள் ஏற்படும். 18 வது வயதில் வாயு கோளாறினாலும், 28 வது வயதில் கண் நோயும் ஏற்படும். ஆணி மாத சதுர்த்தசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை இரவு இருதய நோயால் மரணமடையலாம்.

கடக லக்கினம்

கடக்க லக்கினத்தில் பிறந்தவர்கள் வாக்கு வன்மையுடன் சாமர்த்தியமாக பேச வல்லவர்கள். பென்னசையுடயவர்களாதலால் விலை மாதர் நட்பு உடையவர்கள். சிவந்த நிறமும் கொண்டவர்கள், செல்வந்தர்-நவதானிய வியாபாரம் லாபம் தரும் தொழிலாகும். குருவே தெய்வமென போற்றுவார். மறைவிடங்களில் மஞ்சமுடையவர். நீர், கடல் சம்பந்தமான தொழில் செய்வர். ஹோட்டல், உணவு சம்பந்தமான தொழிலும் செய்வர். 5,16,20,25,40 வயதில் கண்டம் உண்டாகலாம். இவர்கள் மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் மிருகசீரிச நட்சத்திரத்தில் புதன்கிழமை மரணமடைவார்கள்.

சிம்ம லக்கினம்

இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் உணவில் தீராத ஆசையுடயவர்கள், அர்ச்சகராக வேதம் ஓதுபவர்களாக தொழில் புரிவார்கள், தர்மகுணம் கொண்டவர்கள், சுய தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள், கடுகடுப்பும் சினமும் வெளிப்படும் தோற்றம், அரச யோகத்தை குறிக்கும் சாமுத்ரிகா லக்ஷணங்களை உடையவர். தன் கெளரவம் கெடாமல் பார்த்து கொள்வார், சுதந்திர உணர்வுகள் அதிகம், சங்கீதம், நாடகம், இசை இவற்றில் பற்றுண்டு. சங்கீத நாடக, சினிமாத்துறை, அரசு துறை உத்தியோகம் அமையலாம். 5,10,27,30 வயதுகளில் காய்ச்சல் ஏற்பட்டு குணமாகலாம். இவர் பங்குனி மாதம் தேய்பிறை பிரதமை (அல்லது பெளர்ணமி) திதியில் அஸ்த நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை பகலில் மரணமடையலாம்.


கன்னி லக்னம்


ஆசார சீலர், தர்ம குணமுடையவர், இறக்க மனப்பாங்குடையவர், பல தொழில் செய்பவர், செல்வ நிலையில் ஏற்ற இரக்கமுடையவர். இளமையில் கஷ்டபடுபவர். பிற்காலத்தில் செல்வம் சேரும். பெற்றோரை பாதுகாப்பவர், பிறரால் தொழில் வாய்ப்பும் அதில் முன்னேற்றமும் உண்டு. வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் கலந்த நோய் ஏற்படக்கூடும். காலில் மறு இருக்கும். கலை, இலக்கியம், எழுத்து, இசை இவற்றில் வல்லவர், வழக்காடி வெற்றி பெறுவதில் நிபுணர், விஞ்ஞானம், கணிதம், ஜோதிடம் இவற்றில் வல்லவர். மருத்துவம், சமய சொற்பொழிவு இவற்றில் ஈடுபாடு உண்டு. சமய ஈடுபாடும், தளவழிபாட்டு ஈடுபாடும் உண்டு. பெட்டிக்கடைகள், குமாஸ்தா தொழில்கள், ஆடிட்டர் போன்ற தொழில்கள் செய்பவர். புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர், ஆவண பதிவாளர், காரியதரிசி, பங்கு சந்தை நிபுணர்.

விஷ காய்ச்சல், வாயிற்று கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் எளிதில் பற்றிகொள்ளும். 5 வயதில் நெருப்பாலும், 10 வது வயதில் காய்ச்சலாலும், 18 வது வயதில் அம்மை நோயாலும் கண்டம் ஏற்படும். வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

துலாம் லக்னம்

இனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அரசு துறை வேலை வாய்ப்பு பெறுவார். அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள். இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. எல்லாருக்கும் இனியவர், வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டு. சிலேத்தும, அதாவது சளி நோய் உள்ளவர். பெண்களை கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிக தேர்ச்சி பெறுவார். கற்பனை திறன் அதிகம். இடுப்பு பகுதியில் நோய், நீரிழிவு நோய் இவற்றால் பாதிக்கப்படலாம். 7 வது வயதில் வியாதியாலும், 12 வது வயதில் நெருப்பாலும், 19 வது வயதில் அம்ம்மை நோயாலும், 28 வது வயதில் பகைவர்களாலும், 48 வது வயதில் தண்ணீராலும் கண்டம் ஏற்படும். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.


விருச்சிக லக்கினம்


பெற்றோரிடம் பாசம் மிக்கவர். மனைவியிடம் அன்பு காதலுடையவர். இனிமையாக பேசும் ஆற்றலுடையவர். எடுத்த காரியத்தை திறமையுடன் முடிப்பவர். வலிமையான கால்கள், திரண்டுருண்ட தோள்கள், வேகமான நடை இவற்றையுடயவர். கேட்போர்க்கு மறுக்காது கொடுப்பவர். நன்றாக பேச வல்லவர். இவர் பேச்சுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும். தம் உறவினர்களிடம் துவேஷம் உள்ளவர். காம இச்சை அதிகம் உள்ளவர். மனைவியிடத்தில் அதிக ஆசை உள்ளவர். சாஸ்திரப்படி நடப்பவர். சத்ருகளை ஜெயிப்பவர். வலிமையான உடலும், முரட்டுத்தனத்தை எடுத்துக்காட்டும் தோற்றம் உள்ளவர். எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர். வட்டி தொழில், பைனான்ஸ் செய்வதில் வல்லவர். இரசாயன துறை, சுரங்க வேலை, சித்த வைத்தியம், பந்தய, சூட்ட, காபரே நடன தொழில் நடத்தலாம். விவசாய தொழில், துறைமுக தொழில், விளையாட்டு, மின்வாரியம் போன்ற தொழில்களும் அமையலாம். 5 வது வயதில் காய்ச்சலாலும், 10, 12, 18 வது வயதில் நெருப்பாலும், 40 வது வயதில் வாதம், காய்ச்சலாலும் கண்டம் ஏற்படும். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார்.

தனுசு லக்னம்

இவர்கள் மூத்தவர்களுக்கு பயப்படாதவரும் இளையவர்களுக்கு அஞ்சுபவர்களும் ஆவர். கல்வியாளர். பகைவர்களை வெல்பவர். இளம் வயதில் செல்வமுடையவர். எந்த காரியத்திலும் லாப நஷ்டம் பார்ப்பவர். திருமாலின் பொலிவுள்ளவர். வாசனை பொருட்களில் விருப்பம் உள்ளவர். படிப்பாளி. தம் தாய் தந்தையை காப்பவர். வாகன பாக்கியம் உண்டு. நல்ல கட்டான உடல் வாகும் முக்கோண முகமும், சிவந்த நிறமும் உள்ளவர். உதட்டில் குழிவிழுந்த அதிர்ஷ்ட அடையாளம் உண்டு. நிறைய ரோமம் உண்டு. தத்துவம், ஞானம் வேதாந்தம் முதலியவற்றில் விருப்பம் உண்டு. அரசாங்க உத்தியோகத்திற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கரிஞர் , ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோஹிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வி துறை, பதிப்பு துறை, போன்ற தொழில்கள் அமையலாம். 3, 10, 32, 40 வது வயதில் கண் நோயால் பாதிக்கப்படலாம். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிகிழமை மாலை இயற்கை எய்தலாம்.

மகர லக்னம்

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் அழகை ஆராதிப்பவர்கள். மலர்களின் மேல் விருப்பமுள்ளவர்கள். சிவந்த நிறமுடையவர். மனைவி / கணவன் மேல் பிரியமுடையவர்கள். மறைவிடத்தில் மச்சமுள்ளவர். திரிலோக சஞ்சாரியாக ஊர் சுற்றுபவர். பலதுறை கல்வியும் காரியம் சாதிக்கும் வலிமையும் பெற்றவர்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறனும் உள்ளவர். சுய நலம் மிக்க காரியவாதி. மனைவியிடம் அதிக அன்புள்ளவர். படிப்பில் மந்தமானவர். கஞ்சர், எளிதில் பிறரை நம்பாதவர். சந்ததி விருதியுண்டு. இளைத்த ஒல்லியான தேகம் உள்ளவர். தொங்கும் கன்னம், தொய்ந்த தோள்கள், வயதுக்கு அதிகமான தோற்றமும் உள்ளவர். பலன் கருதியே பிறருக்கு உதவுபவர், அரசு தரப்பு வேலைகள் உண்டு, மிகவும் சந்தேக புத்தி உள்ளவர். ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்துகொண்டு இருக்கும். சனி ஜாதகத்தில் நன்கு அமைந்தால் தெளிவு, தியாக புத்தி இருக்கும். தீர்கதரிசியாகவும் இருப்பார். அரசாங்க வேலை, தொழிற்சாலை, எண்ணெய் வள வாரியம், விவசாயம் முதலிய தொழில் உண்டு. மூட்டு வலி, ருமாட்டிசம், கால் சம்பந்தமான நோய்கள் உண்டு. 3,4,5,7,8,10,32,37 வது வயதுகளில் தண்ணீர், சுரம், விஷம் இவற்றால் தொல்லைகள் ஏற்படலாம். ஆவணி மாத தேய்பிறை ஞாயிறு உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் உதய காலத்தில் மரணம் ஏற்படலாம்.

கும்ப லக்னம்

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள். பெண் நண்பர்கள் அதிகம் உண்டு. பித்த சம்பந்தமான நோயுடையவர்கள். நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர். புத்திர மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துகொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கறுப்பு நிறமுடைய உயர்ந்த உடல் வாகு, முட்டை போன்ற நீள்வட்ட முகம், ஒட்டிய கன்னம், அழகிய தோள்கள், பெருத்த வயிறு இவை எல்லாம் கலந்த தோற்றமுடையவர். நோய் அதிகம் ஏற்படாது. கலை இலக்கியம், நாட்டியி பயிற்சி, சிற்ப கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்கு சேவை செய்யும் மனபான்மையும் உண்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்து தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞான துறைகளிலும் ஈடுபாடு உண்டு. தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார். இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம். சீதள பாதிப்பு, இதய நோய், வாத நோய், வெண் குஷ்டம் போன்ற தோள் நோய்கள், வாதம், வலிப்பு, மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படலாம். சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழகிழமை மாலை மரணம் ஏற்படலாம்.

மீன லக்னம்

செயல்வீரர், திறமைசாலி, ஆன்மீக உணர்வுமிக்கவர், உண்மையை விரும்பவர், இறக்க மனமுடையவர், ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வமுடையவர். பிறரது பொருட்கள் பால் விருப்பமுடையவர், மலர்கள் பால் ஆசையுடையவர், இரண்டு திருமணம் நடைபெறும் (இல்லையெனில் பிற பெண்கள் தொடர்பிருக்கும்). பயிர் தொழிலில் செல்வமும், நிறைய வயல்களும் உடையவர். ஞானி, பெரியோர், அந்தணர் இவர்கள் பால் பக்தி விசுவாசம் உள்ளவர். அழகர், வீரர், வாசனை பொருட்களில் பிரியர், அதிக செலவாளி, கண்,காத்து நோய்கள் ஏற்படும். அளவக் உண்பவர், ஆடை அணி அலங்கார பிரியர். அஹிம்சையில் பற்று உண்டு. சிக்கல்கள் வரும்போது சமாளிக்க தைரியமற்றவர், சாத்வீக குணம் உண்டு. லக்னம் அசுப சம்பந்தம் பெற்றால் சிற்றின்பத்தில் இச்சை அதிகமுண்டு. காவியம், நாடகம், சங்கீதம், நடனம் இவற்றில் ஈடுபாடு உண்டு. அமானுஷ்யமான விஷயங்களை ஆரய்வ் ஆராய்வதில் சமர்த்தர். மானசீக தொழிலே இவர்க்கு பெரும்பாலும் அமையும். யோகம், தியானம் போன்றவற்றில் சாதனையாளர். நீர்நிலை, கடல் சம்பந்தமான தொழில்கள் அமையும். ஏழையாயினும் முயன்று வசதிகளை பெறுவார். நண்பர்கள் மத்தியில் மறைமுகமான எதிரிகள் உண்டு. சிலேத்தும நோய்கள் ஏற்படலாம். 12, 20 வது வயதில் காய்ச்சலாலும், 28 வது வயதில் இருமல் போன்ற வியாதிகளாலும் தொல்லை ஏற்படும். சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.


இந்திய ஜோதிடம் ஒன்பது முக்கிய கிரகங்களை கொண்டுள்ளது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகியனவாகும்.

சூரியன்:

நவகிரகங்களில் முக்கியமானதும் ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும். சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் சுற்றி மார்ச் 21 ல் மேஷத்திற்குள் மீண்டும் வருகிறது (இந்திய ஜோதிடப்படி ஏப்ரல் 14). இதன் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், வியாழன். பகை கிரகங்கள் வெள்ளி, சனி ஆகும். புதன் சம கிரகம் ஆகும். இது மேஷம் 10 பாகையில் உச்சம் பெறுகிறது, துலாம் 10 பாகையில் நீசம் பெறுகிறது, சிம்மம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது ஒரு சுபாவ பாப கிரகம் ஆகும். மேலும் இதன் காரக்துவங்கள் உடல் வலிமை, தைரியம், கசப்பு சுவை, நிலம், மோட்சம், ஆத்மா, தந்தை, தந்தையின் நலன்கள், அரசன், அரச உதவி, உயர்ந்த நிலை, மன சுத்தம், அரசாங்கம், பயணங்கள், கோடை, நெருப்பு, கற்கள், புல், காடு, மலை, ஆற்றங்கரை, முகம், கோபம், தலைமை, மருத்துவர், தங்கம், தாமிரம், முத்து, மூங்கில், வெற்றி, சிவப்பு. மருத்துவத்தில் வயிறு, பித்த நீர், வலது கண், காய்ச்சல், எலும்பு, எரிச்சல், தலை நோய், வழுக்கை தலை, பித்த சம்பந்தமான வியாதி, கீழே விழுந்து காயமடைதல், காக்காய் வலிப்பு, நான்கு கால் விலங்குகளால் காயம்.

சந்திரன்:

பூமியின் துணை கோள் ஆன சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. இது 29.5 நாட்களில் 12 ராசிகளையும் சுற்றிவிடுகிறது. பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஒருவரின் ஜன்ம ராசியாகும். சூரியன், புதன் இதன் நட்பு கிரகங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி சம கிரகங்கள். இது ரிஷபம் 3 பாகையில் உச்சமும், விருச்சிகம் 3 பாகையில் நீசமும், ரிஷபம் 4-20 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது இயற்கை சுப கிரகமாகும் (வளர்பிறையாக இருந்தால்). இதன் காரகதுவங்கள் தாயார், தாயார் மூலம் கிடைக்கும் நன்மை, அழகு, முக காந்தம், புகழ், மகிழ்ச்சி, வாகனம், மனம், அறிவு, நகைச்சுவை, பெண்களிடம் ஈடுபாடு, நிறைவு, தூக்கம், திரவம், தண்னீர், பால், தயிர், தேன், உப்பு, சுவையான பழம், மீன் மற்றும் நீர்வாழ்வன, பாம்பு மற்றும் ஊர்வன, பூக்கள், வாசனை திரவியம், வெண்மை, துணி, வெள்ளி, பித்தளை, முத்து, அரச முத்திரை, கிணறு, ஏரி, புனிதபயணம், கூச்சம், கனிவு, காதல், கோதுமை, அரிசி, கரும்பு, உப்பு, பிராமணர்கள், வட கிழக்கு, மழை காலம், நடுத்தர வயது.

செவ்வாய்:

சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் சூரியனிலிருந்து நான்காவதாக உள்ளது. சூரியனிலிருந்து இதன் தொலைவு 227,900,000 கிலோமீட்டர்களாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் 43 நாட்கள் ஆகிறது. இது மகரம் 28 பாகையில் உச்சமும், கடகம் 28 பாகையில் நீசமும், மேஷம் 0-12 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. சூரியன், சந்திரன், வியாழன் இதன் இயற்கை நண்பர்கள், புதன் எதிரி, வெள்ளி, சனி சம கிரகங்கள். இது சுபாவ பாப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் தைரியம்,சகோதரன், வீரம், கோபம், உடல் வலிமை, ஆக்ரோஷம், போர், ஆட்சி திறமை, ஆயுதங்கள் பயன்படுத்தும் திறமை, தலைமை பண்பு, புகழ், வெற்றி, குரூரம், வாள், அறுவை சிகிச்சை, கத்தி,ஊர் தலைவன், இராணுவ தளபதி, வெப்பம், கோடை காலம், நெருப்பு, பூமி, எரிந்த இடம், தங்கம், தாமிரம், நல்ல உணவு, பேச்சு, பாம்பு, சிகப்பு, இரத்தம், கசப்பு காரம் ஆகியனவாகும்.

புதன்:

இது சூரியனை சுற்றும் கோள்களில் முதலாவதாகும். அளவில் சிறிய புதன் இராசியில் சூரியனுடன் இணைந்தோ அல்லது ஒரு ராசி முன் பின்னகவோ எப்பொழுதும் இருக்கும். சூரியன் வெள்ளி இதன் நட்பு கிரகங்கள். சந்திரன் பகை கிரகம். செவ்வாய், வியழன், சனி சம கிரகங்கள். இது கன்னி 15 பாகையில் உச்சம் பெறுகிறது. மீனம் 15 பாலையில் நீச்சம் பெறுகிறது. கன்னி 16-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகங்கள் கல்வி, அறிவு, இலக்கணம், கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், எழுதுதல், தத்துவ அறிவு, பேச்சு திறன், நுண்ணறிவு, பணிவு, அச்சு தொழில், அமைச்சர், வணிகம், கோவில்,குதிரை, மந்திர தந்திர சாஸ்திரம், அலி, சூத்திரர், இலையுதிர் காலம் , பச்சை நிறம், இளவரசர், இளைஞன், தாய் மாமன், தாய் வழி பாட்டன், மருத்துவர், பட்டை தீட்டுதல் (கற்களுக்கு) ஆகியானவாகும்.

வியாழன் (குரு):

நவக்கிரங்களில் மிகுந்த சுபகிரகம் குருவாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் இதன் நட்பு கிரகங்கள். புதன், வெள்ளி பகை கிரகங்கள். சனி சம கிரகம்.வியாழன் கடகம் 5 பாகையில் உச்சம் பெறுகிறது. மகரம் 5 பாகையில் நீச்சமும் தனுசு 0-10 பாகையில் மூலத்திரிகோண பலமும் பெறுகிறது. இது சுபாவ சுப கிரகம் ஆகும். இதன் காரகதுவங்கள் வாரிசு, பிள்ளைகள், பேரன், சிஷ்யர்கள், தனம், பொக்கிஷம், வேத பாடம், தத்துவ கல்வி,நீதி, சமஸ்கிருதம், உயர் கல்வி, ஜோதிடம், வானவியல்,இலக்கணம், மத சம்பந்தமான கல்வி, பாட்டனார், ஆசிரியர்கள், புனித இடங்கள், கூறிய அறிவு, ஞானம், எழுத்தாளர், தர்மவான், சுய கட்டுப்பாடு, தவம், நீதிபதி, வேத அறிவு, மஞ்சள் துணி, மஞ்சள் புஷ்பராகம், பசுக்கள், யானைகள், தேர், மூத்த் சகோதரர், நண்பர்கள், வட கிழக்கு திசை ஆகியவற்றை குறிக்கும்.

வெள்ளி (சுக்கிரன்):

பிரகாசமான இந்த கிரகம் வெறும் கண்களில் நன்கு தெரியக்கூடியது. சூரிய உதயதின்போதும் அஸ்தமனத்தின்போதும் அடிவானில் தென்படும். இது சுபாவ சுப கிரகம் ஆகும். புதன், சனி ஆகியவை இதன் நண்பர்கள், சூரியன், சந்திரன் இதன் எதிரிகள். செவ்வாய், வியாழன் சம கிரகங்கள். சுக்கிரன் மீனம் 27 பாகையில் உச்சம் பெறுகிறது. கன்னி 27 பாகையில் நீசம் பெறுகிறது. துலாம் 0-15 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன காரகதுவங்கள் மனைவி, பெண், திருமணம், மனைவியின் மூலம் இன்பம், கம களியாட்டங்கள், காதல், சோரம் போதல்,பல பெண்களுடன் தொடர்பு,அழகு, வாசனை பொருள் வியாபாரம், வேலையாட்கள்,அரச சன்மானம், ஆபரணங்கள், வைரம், பஞ்சு, கலை, இசை, நடனம், பாட்டு, கவிதை, நாடகம், வாகனம், யானை, குதிரை, பசு, வீணை, புல்லங்குழல் வாசித்தல், வசந்த காலம், தென்கிழக்கு திசை, மத்திம வயது, விவசாயம், படுக்கை அறை, வெண்மை,நெய், தயிர், தங்கம், வெள்ளி, நல்ல உணவு, வைசியர் ஆகியனவாகும்.

நவகிரகங்களில் தொலைதூரத்தில் சுற்றிவருவது சனியாகும். இது ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகின்றது. கருமை நிறத்தை குறிக்கிறது. புதன், சுக்கிரன் இதன் நட்பு கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய் எதிரிகளாகும். வியாழன் சம கிரகமாகும். இது துலாம் 20 பாகையில் உச்சம் பெறுகிறது. மேஷம் 20 பாகையில் நீசம் பெறுகிறது. கும்பம் 0-20 பாகையில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதன் காரகதுவங்கள் ஆயுள், துன்பம், நோய், தடங்கள், வருத்தம், அவமானம், அடிமை தன்மை, கோழைத்தனம், தண்டனை, அசிங்கம், அழுக்கு துணி, அலி, சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு, உலக இன்பங்களை வெறுத்தல், சூத்திரர்கள், பிச்சை, தீயவர்களுடன் சேர்க்கை, நாடோடி, எருமை, இரும்பு, கருப்பு நிற தானியங்கள்,சாம்பல் , விவசாயம், வேலைக்கரன் ஆக இருத்தல்.


1. சூரியன்

ஜாதி: ஷத்ரியர்
குணம்: சாத்விக
சமூகநிலை: அரச
பாலினம்: ஆண்
உறுப்பு: எலும்பு
திசை: கிழக்கு

2. சந்திரன்

ஜாதி: வைசிய
குணம்: சாத்விக
சமூகநிலை: அரச
பாலினம்: பெண்
உறுப்பு: இரத்தம்
திசை: வடமேற்கு

3. செவ்வாய்

குணம்: ஷத்ரிய
குணம்: தாமச
சமூகநிலை: இராணுவ தளபதி
பாலினம்: ஆண்
உறுப்பு: எலும்பு மஜ்ஜை
திசை: தெற்கு

4 புதன்

குணம்: வைசிய
குணம்: ரஜஸ்
சமூகநிலை: இளவரசர்
பாலினம்: அலி
உறுப்பு: தோல்
திசை: வடக்கு

5. வியாழன்

குணம்: பிராமணர்
குணம்: சாத்விகம்
சமூகநிலை: அமைச்சர்
பாலினம்: ஆண்
உறுப்பு: கொழுப்பு
திசை: வடகிழக்கு

6 சுக்கிரன்

குணம்: பிராமணர்
குணம்: ரஜஸ்
சமூகநிலை: அமைச்சர்
பாலினம்: பெண்
உறுப்பு: சுக்கிலம்
திசை: தென்கிழக்கு

7 சனி

குணம்: சூத்திரர்
குணம்: தமஸ்
சமூகநிலை: வேலைக்காரர்
பாலினம்: அலி
உறுப்பு: நரம்பு
திசை: மேற்கு


ராகு-கேது:

இந்திய ஜோதிடத்தில் ராகு கேதுகள் இடம் பெறுகின்றன. மற்ற கிரகங்கள் போல் அவை பரு பொருட்கள் அல்ல. நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் எனப்படும் இவை கணித புள்ளிகள் (Mathematical points) ஆகும். இது சந்திரனின் சுற்றுப்பாதை (orbit) ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதையை வெட்டும் இடமாகும். Ascending Node எனப்படும் ராகு சந்திரனின் சுற்றுவட்ட பாதை (படத்தில் நீல நிறத்தில் இருப்பது) தெற்கிலிருந்து வடக்காக ecliptic ஐ குறுக்கிடும்போது உண்டாகிறது. அதே போல் கேது எனப்படும் Descending Node சந்திரனின் பாதை வடக்கிருந்து தெற்காக ecliptic ஐ வெட்டும்போது நிகழ்கிறது. கிரகணங்கள் ஏற்படுவது இந்த சமயங்களில்தான். அமாவாசை சமயத்தில் சந்திரன் இந்த புள்ளி (node) வழியாக செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதுபோல் பெளர்ணமி சமயத்தில் சந்திரன் இந்த புள்ளியில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் வரும்போது ஏற்படுகிறது. பெளர்ணமி என்பது சந்திரன் சூரியனுக்கு 180 பாகையில் இருக்கும்போது ஏற்படுகிறது. ராகு கேதுக்கள் எப்பொழுதும் 180 பாகை இடைவெளியில் உள்ளன. மேலும் இவை எதிர் கடிகார சுற்றில் சுற்றுகின்றன.

புதன் சுபகிரகங்களுடன் கூடினால் சுப பலன் தரும். பாவிகளுடன் இணைந்தால் சுப பலன் தராது. வளர்பிறை சந்திரனும் (வளர்பிறை 8வது திதிக்கு மேல், தேய்பிறை 8வது திதி வரை), குருவும், முழு சுப கிரகங்கள், சுக்கிரன் முக்கால் பங்கு சுப கிரகம், புதன் அரை பங்கு சுப கிரகம், தேய்பிறை சந்திரன் கால் பங்கு சுப கிரகம்.சனி, ராகு, கேது இயற்கையில் முழு பங்கு பாவிகள். செவ்வாய் முக்கால் பங்கு பாவ கிரகம். சூரியனும் பாவிகளுடன் கூடிய புதனும் அரை பங்கு பாவர்கள். பாபருடன் கூடிய தேய்பிறை சந்திரன் கால் பங்கு பாவி. அமாவாசை காலத்தில் சூரியன் சந்திரன் இணைந்திருக்க அவருடன் புதன் சம்பந்தபட்டால் முக்கால் பங்கு சுபர்.

ஒரு கிரகம் ராசியில் உச்ச வீட்டிலும், அம்சத்தில் உச்சம் பெற்றாலும், ஆட்சி பெற்றாலும், அம்சத்தில் ஆட்சி பெற்றாலும், சுபகிரகங்களுடன் இணைந்தாலும், பர்க்கபட்டாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், நட்பு கிரகத்துடன் இருந்தாலும், நற்பலன் தரும். ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானம் எனப்படும். அது போல் 1,5, 9 ஆகிய வீடுகள் திரிகோண ஸ்தானம் எனப்படும். 2,5,8,11 ஆம் இடங்கள் பணபர ஸ்தானம் எனப்படும். 3,6,9,12 ஆகிய இடங்கள் அபோக்லிமம் எனப்படும். உபஜெய ஸ்தானம் என்பது 3,6,10,11 ஆகிய இடங்களாகும்.

கிரக அவஸ்தை:

கிரகங்கள் சுற்றிவரும் போது 'அவஸ்தை' நிலைக்கு ஆளாகின்றன. மொத்தம் 10 வகை அவஸ்தை நிலைகள் உள்ளன. ஒற்றை படை ராசிகளில் (odd signs) முதல் 6 பாகை பால பால அவஸ்தை, அடுத்த 6 பாகைகள் (7-12) குமார பருவம், அடுத்த 6 பாகைகள் (13-18) யெளவன பருவம், அடுத்த 6 பாகைகள் (19-24) கில பருவம், கடைசி 6 பாகைகள் (19-24) இறந்த பருவம் என்று கொண்டு அந்தந்த ராசிகளில் உள்ள கோள்களின் பலனை அறிய வேண்டும். இரட்டை ராசிகளில் (even signs) இந்த அவஸ்தைகள் முதல் 6 பாகைகள் இறப்பு என ஆரம்பித்து தலை கீழாக பலன் தருகின்றன. இதில் பாலவஸ்தையில் குறைந்த 1/4 பங்கும், குமார அவஸ்தையில் 1/2 பங்கும், வாலிப பருவத்தில் முழு பலனும், கிழ பருவத்தில் உள்ள கோள்கள் கெட்ட பலனும், இறப்பு பருவத்தில் உள்ள கோள்கள் இறப்புக்கு சமமான பலனும் தருகின்றன.

வக்கிர கதி, அஸ்தங்கம்:

சூரியனுடன் ஒரே ராசியில் இணைந்த கோள் அஸ்தங்கம் (combust) அடைகிறது. அஸ்தங்கம் அடைந்த கோள் நற்பலன் தராது. ராகு- கேதுவை தவிர கிரகங்கள் பொதுவாக கடிகார சுற்றில் சுற்றுகின்றன. இப்படி சுற்றும் கிரகம் நின்று எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் அந்த கிரகம் வக்கிர கதியில் (retrograde motion) இருப்பதாக கொள்ளலாம். சூரியன், சந்திரன், ராகு, கேது இவர்களுக்கு வக்கிர கதி கிடையாது. சூரியனுக்கு அஸ்தங்கம் கிடையாது. சூரியனிலிருந்து 2 ல் உள்ள கோள் அதிசாரம் அடைகிறது. 3 ஆம் ராசியில் சமகதி அடைகிறது. 4 ஆம் இடத்தில் மந்த கதி அடைகிறது. 5,6 வது ராசிகளில் உள்ள கோள் நேர் கதி அடைகிறது. 7,8 ஆம் இடங்களில் உள்ள கோள் வக்கிர கதி அடைகிறது. 9 ஆம் இடத்தில வக்கிர கதி அடைகிறது. 10 ஆம் இடத்தில வக்கிர நிவர்த்தி அடைகிறது. மீண்டும் 11,12 ஆம் இடங்களில் அதிசாரம் எனும் வேக கதியை அடைகிறது.

ஷட்பலம்:

ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்ட பலம், கால பலம், திருக் பலம், நைசர்கிக பலம் என்பனவாகும். ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.


ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்:

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்:

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்:

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்:

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.

4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்:

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.

குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்:

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்:

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்:

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்:

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.

தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்:

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்:

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்:

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.


யுகங்கள் நான்கு:

1. கிருத யுகம்
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்

யுகங்களின் கால வரையறை:

கிருதயுகம் வரு- 1728000
திரேதாயுகம் வரு- 1296000
துவாபரயுகம் வரு- 864000
கலியுகம் வரு- 432000

சப்த வருஷங்கள்:

1. பாரத வருஷம்
2. கிம்புருஷ வருஷம்
3. அரி வருஷம்
4. குரு வருஷம்
5. இலவிருத வருஷம்
6. ரம்மிய வருஷம்
7. ஐரண்வத வருஷம்

நாம் வசிப்பது பாரத வருஷமாகு. மற்றுமுள்ள வருஷங்களின் தேசங்களைச் சோதிடப் பெருநூர்களிலாவது பாக்கெட் ஜோதிடத்திலாவது பார்க்க விளங்கும்.

மற்றுமுள்ள அப்தங்ககளும் நவகண்டங்களும் இங்கு அவசியமில்லை ஆதலால் அவை இங்கு சொல்லப்படவில்லை.

வருஷங்கள் 60
வருஷம் என்பது அயனமேன்னும் பாகத்தையும், ருதுக்கலேன்னும் காலத்தையும், மாதங்களையும் தன்னுள் அடக்கி 365 நாள் கொண்டு சில சமயங்களில் அதிக மாதங்களையும் கொண்டுள்ளது. மானிடர்களுக்குக் காலக்கணக்கை காட்டக் கூடியது; பிரபஞ்சத்திற்கும் பிரஜைகளுக்கும் காலத்தால் ஆனந்தத்தை ஊட்டக்கூடியது. இது தேவர்களுக்கு ஒரு நாள்.

வருஷ பஞ்சகம்:

1. வருஷம்
2. அயனம்
3. ருது
4. மாதம்
5. பக்ஷம் -ஆகிய இவ்வைந்துமே வருஷ பஞ்சகம் எனப்படும்.

அவை கீழ் வருமாறு காண்க:

1.பிரபவ 2.விப 3.சிக்கில 4.பிரமோதூத 5.பிரஜோற்பத்தி 6.ஆங்கிரச 7.ஸ்ரீ முக 8.பவ 9.யுவ 10.தாது 11.ஈசுவர 12.வெகதான்ய 13.பிரமாதி 14.விக்கிரம 15.விஷூ 16.சித்திரபானு 17.சுபானு 18.தாரண 19.பார்த்திவ 20.விய 21.சர்வசித்து 22.சர்வதாரி 23.விரோதி 24.விகிருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வரி 35.பிலவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.குரோதி 39.விசுவாவசு 40.பிராபவ 41.பிலவங்க 42.கீழாக 43.சௌமிய 44.சாதாரண 45.விரோதிக்ருது 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ஆனந்த 50.நல 51.பிங்கள 52.காலயுத்தி 53.சித்தார்த்தி 54.ரௌத்திரி 55.துன்பதி 56.துந்துபி 57.ருத்ரோத்காரி 58.ரக்தாஷி 59.கொரோதன 60.அக்ஷய.

அயனங்கள் இரண்டு:

1. உத்திராயணம்
2. தக்ஷணாயணம்

அயனம் என்றால் கமனம். (அதாவது செல்வது என்று பொருள்)

கிழக்கு பாகத்தை இரண்டாக - அதில் வடபாகம் பதியும் தென்பாகம் பாதியுமாகிறது. சூரியன் வடபாகத்தில் தை மாதம் முதல் தேதி முதல் ஆணி மாதம் 30-ம் தேதி வரையில் செல்வதுதான் உத்தராயணம், தென்பாகத்தில் ஆடி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்கழி மாதம் 30-ஆம் தேதி வரையில் செல்வதுதான் தக்ஷணாயணம்.

உத்தராயணமான வடபாகம் தேவர்களுக்கு இருப்பிடமாம், இக்காலத்தை தேவர்களுக்கு பகற்காலமென்று சொல்வார்கள். ஆதலால் இக்காலம் மானிடர்களுக்கு சுப காரியங்கள் செய்ய உத்தமமான காலமாகும். தக்ஷ்ணாயனமான தென்பாகமானது இராக்ஷதரும் பிதிர்தேவதைகளும் வாசஞ்செய்யும் இடமாம். இதை இராத்திரி காலமென்றே சொல்வார்கள். ஆதலால் மானிடர்களுக்கு இது மத்திமமான காலமாகும்.


"ஜனனி ஜன்ம செளக்யானம், வர்த்தனி குல சம்பதம் பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா"

ஒவ்வொரு ஜாதகத்தின் தொடக்கத்திலும் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் பொருள் யாதெனில் இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை, தீமைகள் அவன் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிரம்மாவால் கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சங்கேதமாக குறிக்கப்பட்டுள்ளது.

ZODIAC எனப்படும் இராசி மண்டலம் பூமியை சுற்றியுள்ள 360 பாகை சுற்றளவுள்ள கற்பனையான 18 பாகை அகலமுள்ள பகுதியாகும். இதன் மையத்தில் ecliptic எனப்படும் சூரியனின் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருசிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். இந்த 12 ராசிகளே ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளாகும். ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகள் ராசி கட்டத்தில் குறிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஒருவர் பிறக்கும்போது சூரியன் 70 பாகையில் இருந்தால் அது மிதுன ராசியில் 10 பாகை வரை உள்ளது. (30 பாகை மேஷம் + 30 பாகை ரிஷபம் முடிந்து மிதுனத்தில் 10 பாகை). மேலும் இராசி மண்டலம் 13.3333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.



ஒருவர் பிறக்கும்போது கீழ்வானத்தில் (Eastern horizon) உதயமாகும் இரசியே ஜனன லக்கினமாகும். பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் உதய ராசி மாறிக்கொண்டே இருக்கும். இது ஜாதகத்தில் "ல" என்று குறிக்கப்படும். லக்கினம் மிக முக்கியமாகும். லக்கினமே ஜாதகத்தில் முதல் வீடு / இலக்கின பாவமாகும். சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.

சோதிட அலங்காரம்:

சோதிடம் பற்றிய குறிப்புகளையும், விளக்கங்களையும் எனக்குத் தெரிந்ததும், பிறரிடம் கேட்டு அறிந்ததும், இணையத்தில் படித்த பல தகவல்களையும் தொகுத்து இங்கே பதிவு செய்கிறேன். இதுவே உண்மையென்றும், இதுவே நிரந்தரம் என்றும் யாரும் முடிவு செய்து கொள்ளாமல் இந்த தகவல்களுடன் உங்கள் வாழ்க்கையையும், உங்கள் நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஒப்பிட்டு புரிந்துகொள்ளுங்கள்.

சோதிடம் என்பது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் முன்னோடியானது. பழங்காலத்தில் வாழ்ந்த மனிதனின் ஆழ்மனத்துக்குள் எழுந்த சிந்தனையாலும், ஆழமான அறிவாலும் கணித்து சொல்லப்பட்ட ஒரு அற்புதமான கலைதான் சோதிடம் என்பதை புரிந்துகொண்டாலே பல விவாதங்களை தவிர்த்து இந்த சோதிடக் கலையை உணர முடியும் என்பது என்னுடைய கருத்து.



அன்புடன்,
காலக்கணித ஆய்வாளன்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget